கொரோனா காலத்தில் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மெக்சிகோ
மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், 17,982 பெண்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த 17,653 கொலைகளை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெண்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அடைந்து கிடப்பதே காரணம். இந்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களில் 489 பெண்கள் கொல்லப்பட்டனர், இது 2019 முதல் பாதியில் 448 ஆக இருந்தது.
மெக்சிகோவில் வன்முறையின் முக்கிய காரணமாக இருக்கும் போதைப்பொருள் கும்பல் நடவடிக்கையைத் தடுக்கவும் தொற்றுநோய் தவறிவிட்டது.
கடந்த வாரம் ஆன்லைனில் வெளியான வீடியோ ஒன்றில் சுமார் 75 கனரக ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பலை சேர்ந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் இராணுவ பாணியில் கவச லாரிகளுடன் பேரணி நடத்தினர். மெக்சிகோவின் பாதுகாப்புத் துறை இந்த வீடியோ உண்மையானது என்றும் “இராணுவ பாணி பயிற்சிக்கான ஆதாரங்களை” காட்டுகிறது என்றும் கூறி உள்ளது.