கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை மாவட்ட ஆட்சியர் – 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்

Spread the love

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து பணிகளுக்கு திரும்பினார்.

கோவை,

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொற்று உறுதியானது அதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார். அதையடுத்து 26 நாட்களுக்கு பிறகு இன்று பணிக்கு திரும்பினார். அவரை அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page