நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Spread the love

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ந்தேதி வந்துள்ளார். அவர் தங்கியிருந்த 3வது நாளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்தது.

ஆனால், அவர் வந்த 9 நாட்களுக்கு பின்னர் நடந்த மற்றொரு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனால், ஆக்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் நியூசிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,220 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இல்லை. நியூசிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து கொள்வோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 22 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என சுகாதார துறை பொது இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு தெரிவித்து உள்ளார்.

நியூசிலாந்து நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்த நிலையில், 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page