நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் பாராபைஸ் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 21-பேரை காணவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கி 314- பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகளில் சிக்கிய 111-பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 160- பேர் காயம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page