ஒரே நாளில் 2.19 கோடி மின்னணு பரிவர்த்தனைகள்

Spread the love

துடில்லி: இந்தியாவில் கடந்த மார்ச் 30ம் தேதி, சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகளை மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், மார்ச் 24 முதல் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைவதால், அம்மாதத்தின் கடைசி வாரத்திலும், ஏப்ரலில் முதலிரண்டு வாரங்களிலும் மத்திய அரசு அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், பயனாளிகளுக்கும் மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதி அனுப்பப்படும். அந்த வகையில் மார்ச் 30ம் தேதி ஒரே நாளில் 2 கோடியே 19லட்சம் மின்னணு பரிவர்த்தனைகளை அதிகாரகள் மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகமான பரிவர்த்தனை நிகழ்ந்தது சாதனையாக கருதப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகளில், 1 கோடியே 97 லட்சம் பரிவர்த்தனைகள் பிரதமரின் கிஷான் திட்ட பயனாளிகளான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதி அளிக்க மேற்கொள்ளப்பட்டவை என தகவல்கள் கூறுகின்றன. மேலும், மார்ச் 24 முதல் 31 வரை, 7.2 கோடி பரிவர்த்தனைகள் இந்த அமைப்பில் நடத்தப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் கடந்தாண்டு 3.44 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page