தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா 60 பேர் உயிரிழப்பு

Spread the love

தமிழகத்தில் புதிதாக நேற்று 5,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 78 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,260 ஆண்கள், 2,084 பெண்கள் என மொத்தம் 5,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 87 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 489 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

 

அதிகபட்சமாக சென்னையில் 982 பேரும், கோவையில் 648 பேரும், சேலத்தில் 295 பேரும், செங்கல்பட்டில் 219 பேரும், திருவள்ளூரில் 212 பேரும், ஈரோட்டில் 201 பேரும், கடலூரில் 153 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 63 லட்சத்து 53 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 959 ஆண்களும், 2 லட்சத்து 17 ஆயிரத்து 348 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 30 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 762 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 70 ஆயிரத்து 805 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 31 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 90 வயது முதியவர்கள் உள்பட 60 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 6 பேரும், காஞ்சீபுரம், தஞ்சாவூர், வேலூரில் தலா 4 பேரும், கிருஷ்ணகிரி, நாமக்கலில் தலா 3 பேரும், ஈரோடு, திருச்சியில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 8,871 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 492 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 805 பேரும், கோவையில் 531 பேரும், சேலத்தில் 361 பேரும், கடலூரில் 255 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 495 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 926 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 243 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page