தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 879 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது

Spread the love

தமிழகம் முழுவதும் நேற்று 4 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

 

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,877 ஆண்கள், 2 ஆயிரத்து 1 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 4,879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 65 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 459 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,212 பேரும், கோவையில் 393 பேரும், சேலத்தில் 304 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 16 பேரும், பெரம்பலூரில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 81 லட்சத்து 63 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தபட்டியலில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 382 ஆண்களும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 850 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 900 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 ஆயிரத்து 777 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 33 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 62 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 13 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 7 பேரும், கோவையில் 6 பேரும், வேலூரில் 4 பேரும், கடலூரில் 3 பேரும், தர்மபுரி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், நெல்லையில் தலா இருவரும், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருப்பூரில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 314 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 165 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,219 பேரும், கோவையில் 466 பேரும், சேலத்தில் 332 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 43 ஆயிரத்து 747 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 925 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 982 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 342 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page