பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்ப்பு

Spread the love

சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முயன்றதாக பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

பெலாரஸ்

பெலாரஸ் நாட்டில் 1994 முதல் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி லுகாஷென்கோவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோவின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா அக்டோபர் 25 க்குள் லுகாஷென்கோ விலகுவதற்கும் “அரச பயங்கரவாதத்தை” நிறுத்துவதற்கும் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். “அக்டோபர் 25 க்குள் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முழு நாடும் அமைதியான போராட்டம் நடக்கும்” என்ற ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

உங்களுக்கு 13 நாட்கள் உள்ளன அக்டோபர் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களிலும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கும், அனைத்து சாலைகளும் மறிக்கப்படும், மேலும் அரசு கடைகளில் விற்பனை சரிந்துவிடும்” என்று அவர் மேலும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க அழைப்பு விடுத்ததாக பெலாரஸ் அரசாங்கத்தால் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயாவை தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்த்ததாக ரஷியாவின் அரசுக்கு சொந்தமான ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லுகாஷென்கோவால் உரிமை கோரப்பட்ட ஆகஸ்ட் 9 தேர்தல்களுக்குப் பிறகு சிகானவுஸ்காயா லித்துவேனியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். சிகானவுஸ்காயா பின்னர் பெர்லின் சென்றார் அங்கு அவர் லுகாஷென்கோவை நீக்குமாறு கேடு மேர்க்கலை கேட்டு கொண்டார்.

ஸ்வியாட்லானாவின் கணவர் செர்ஜி டிகானோவ்ஸ்கி லுகாஷென்கோவின் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page