வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் – அமெரிக்கா

Spread the love

அமெரிக்க வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் கூறியதாவது:- ஒரு தீவிர வலதுசாரி டிரம்ப் சார்பு குழுவிலிருந்து இந்த மின்னஞ்சல்கள் வந்ததாகத் தோன்றின. அவை அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தது.

ஈரான் மற்றும் ரஷ்யா சில வாக்காளர் பதிவு தகவல்களை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கும், அமைதியின்மையைத் தூண்டுவதற்கும், சேதப்படுத்துவதற்கும்” ஈரானின் “ஸ்பூஃப் மின்னஞ்சல்கள்” அனுப்பி உள்ளனர். அமெரிக்க வாக்காளர்களை பாதிக்கும் நடவடிக்கைகள்அவநம்பிக்கையான விரோதிகளின் அவநம்பிக்கையான முயற்சிகள் கூறினார்.

எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வேரே அமெரிக்க தேர்தல் அமைப்புகள் இன்னும் பாதுகாப்பானவை மற்றும் “நெகிழும் தன்மை வாய்தவை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page