2035 வரை சீனாவின் அதிபராக ஜின்பிங் நீடிப்பார் சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்

Spread the love

2035-ம் ஆண்டு வரை ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது தனது 82 வயது வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் இருக்க அக்கட்சி அனுமதி அளித்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு சீன அதிபராக ஜின்பிங் பொறுப்பேற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது.

இந்தநிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமை குழு சார்பில் மத்திய குழு உறுப்பினர்கள், அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து 2035-ம் ஆண்டு வரை ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது தனது 82 வயது வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் இருக்க அக்கட்சி அனுமதி அளித்துள்ளது.

மேலும் இந்த மாநாட்டில், 14-வது ஐந்தாண்டு திட்டத்துக்கும் (20212025) ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் பதவியை தவிர கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் கவனித்து வரும் ஜின்பிங், இந்த பதவிகளில் ஆயுள் முழுவதும் இருப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page