பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி: பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து சிராக் பாஸ்வான் கருத்து

Spread the love

பீகார் சட்டமன்ற தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தாலும் அக்கட்சி பெற்ற வாக்குகள் 5.6 சதவீதம் உயர்ந்துள்ளது.


பாட்னா,

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பின்னிரவு நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும் மெகா கூட்டணி 110 இடங்களையும் வென்றது. லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியது. பிற கட்சிகள் 7 இடங்களில் வென்றன. இதன் மூலம், பீகாரில் மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ பிரதமர் மோடி மீதான தங்கள் நம்பிக்கையை பீகார் மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இது பிரதமர்மோடிக்கு கிடைத்த வெற்றி”எனத் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை வென்றிருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிய ஜனதா தளம் உள்ளது. அந்தக் கட்சி 75 இடங்களை வென்றுள்ளது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page