பிரதமர் மோடி திறந்து வைக்கும் ‘அமைதியின் சிலை’

Spread the love

இன்று பகல் 12.30 மணி பிரதமர் மோடி, ‘அமைதியின் சிலை’ என்ற பெயரில் அமைந்துள்ள சிலையை திறந்து வைக்கிறார்.


புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி , இன்று பகல் 12.30 மணிக்கு, ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ் என்ற ஜைனத்துறவியின் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ‘அமைதியின் சிலை’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்( !870-1954), ஜைனத்துறவியாக எளிய வாழ்க்கையை வாழ்ந்து, பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி அதனை மக்களுக்கு போதித்து வாழ்ந்தவர் ஆவார். மக்களின் நலனுக்காகவும், கல்வியைப் பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்களை படைத்தவர். மேலும் சுதேசி கொள்கையை வலியுறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார்.

அவருடைய ஊக்குவிப்பால் கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன. அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் திறந்து வைக்கப்படவுள்ள சிலைக்கு ‘அமைதியின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இந்தச் சிலை அமைக்கப்படவுள்ளது. 151 அங்குலம் உயரமுள்ள இந்த சிலை, 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் செம்பு அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page