நேபாளத்தை உலுக்கும் கொரோனா- ஒரே நாளில் 7,220-பேருக்கு தொற்று

Spread the love

2.86- கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,220- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 185- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,531- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 7,135- பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்புடன் 1.15 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு உயர்வால் அடுத்த சில நாட்களில் சுகாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page