அம்பேத்கர் பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்த அனுமதி

Spread the love

பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்த தமிழக அரசு அனுமதியளித்து உள்ளது.

சென்னை,

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்து, நாட்டுக்கு அளித்த சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் வருகிற 14ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டு பிறப்பும் அன்று வருகிறது.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 14ந்தேதி, நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிப்பது என இந்திய அரசின் துணை செயலாளர் சார்பில் முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page