சொமட்டோ ஊழியர் உடையில் சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை நியூ ஆவடி சாலை கே.ஜி ரோடு சந்திப்பில்போலீஸ் சப் இன்ஸ்பெகடர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சொமட்டோ ஊழியரை வழிமறித்து அடையாள அட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னும்பின்னுமாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் கொண்டுவந்த உணவுப்பெட்டியை சோதனை செய்தபோது அதில் மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. அதனை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இளைஞர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(32) என்பது தெரியவந்தது. சொமட்டோ ஊழியரான இவர் தேவைப்படுவோருக்கு மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.