மத்திய நீதித்துறை மும்பை ஐகோர்ட்டின் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உள்ளது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 94 ஆகும். ஆனால் தற்போது 62 பேர் மட்டுமே உள்ளனர். 32 நீதிபதிகள் குறைவாக உள்ளனர். இந்தநிலையில் மத்திய நீதித்துறை மும்பை ஐகோர்ட்டின் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உள்ளது.
இதுகுறித்து நீதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “நீதிபதிகள் அவினாஷ் குன்வந்த் கரோதே, நிதின் பகவந்த்ராவ் சூரியவன்சி, அனில் சத்யவிஜய் கிலோர், மிலிந்த் நரேந்திர ஜாதவ், முகுந்த் கோவிந்த்ராவ் செவ்லிகர், வீரேந்திரசிங் ஞான்சிங் பிஸ்த், தேபாவர் பாலசந்திர உக்ராசென், முகுலிகா ஸ்ரீகாந்த் ஜவால்கர், சுரேந்திர பன்டர்னாத் தாவடே, நிதின் ருத்ராசென் போர்கர் ஆகியோர் நிரந்த நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.