பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு

Spread the love

பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதி தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆண்டின் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட்ட பிளஸ்-1 பொதுத் தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணியும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு முடிந்ததும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் இடைவெளிவிட்டுதான் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளது.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணிகள், உள்ளிட்ட பணிகள் இருப்பதால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page