மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3081 ஆக உயர்வு- மும்பையில் மேலும் 107 பேருக்கு பாதிப்பு

Spread the love

மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3081 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. 414 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 2916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டத

இந்நிலையில் இன்று மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் 107 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page