ஏப்.,20 முதல் ‘ஆன்லைன்’ மூலம் ‘டிவி, பிரிஜ்’ பொருட்களை வாங்கலாம்’

Spread the love

புதுடில்லி: ‘ஏப்., 20ம் தேதியில்இருந்து, ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், ‘டிவி, பிரிஜ்’ போன்ற பொருட்களை வாங்கலாம்’ என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக, அடுத்த மாதம், 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும், ஏப்., 20ல் இருந்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்வதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page