அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Spread the love

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்:

உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ், மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் மக்களை வீடுகளுக்குள் முடக்கி, கடுமையான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். கொரோனாவின் தாக்கம் முடிந்த பிறகு, இதனை சரிசெய்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஒவ்வொரு நாட்டுக்கும் மிகப்பெரிய சவாலான விஷயம்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.

கண்ணுக்கு தெரியாத எதிரியின் (கொரோனா) தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், அமெரிக்க மக்களின் வேலையை பாதுகாக்கும் விதமாகவும், குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page