தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் சத்துணவு கூடங்களில் 3 வேளை இலவச உணவு வழங்கவேண்டும் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

Spread the love

தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் மற்றும் சத்துணவு கூடங்களில் தினசரி 3 வேளையும் இலவச உணவு வேண்டுமென்று பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஏப்.24 :

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்ட நிலையில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசுபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது .பசி பட்டினியை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவது பாராட்டுக்குரியது

.அதே போன்று சென்னை மாநகரில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக 3 வேளையும்  உணவு வழங்குவது தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியார் பாடல் நம் நினைவுக்கு வருகிறது .

தமிழக அரசு 3 வேளை   இலவச உணவு வழங்குவதால் அடித்தட்டு மக்களின் பசியை போக்குவதோடு தமிழகத்தில் மனிதநேயம் தழைத்தோங்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கு வழியில்லை . கொரோனா வைரசை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது .

அதே   நேரத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி அம்மா உணவகங்கள் மூலம் 3 வேளையும் இலவச உணவு வழங்குவது போல் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் மற்றும் சத்துணவு கூடங்கள் வழியாக 3 வேளையும் இலவச உணவு வழங்கி தமிழக மக்களின் பசியார உதவிட வேண்டுமென்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page