கொரோனா வைரசுக்கு உலக அளவில் பலி 2.55 லட்சம் ஆக உயர்வு

Spread the love

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2.55 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் என்னும் கொலைகார தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்து செல்கிறது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையத்தின் தகவல்படி, அதிகளவிலான உயிர்ப்பலியை சந்திக்கிற நாடாக அமெரிக்கா நீடிக்கிறது. அங்கு 70 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் 29 ஆயிரத்துக்கு அதிகமானோரும், இங்கிலாந்தில் 29 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் 25 ஆயிரத்து 600-க்கும் கூடுதலானோரும் உயிரிழந்திருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோய் என கடந்த மார்ச் 11-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page