தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49 ஆயிரத்தை தாண்டியது

Spread the love

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1694 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49 ஆயிரத்தை தாண்டியது

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 49,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2958 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1694 ஆக உயர்ந்துள்ளது. 14,182 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 15525 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 617 பலியாகி உள்ளனர். குஜராத்தில் 6245 பேருக்கும், டெல்லியில் 5104 பேருக்கும், தமிழகத்தில் 4058 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3049 பேருக்கும், ராஜஸ்தானில் 3158 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 2880 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page