கொரோனா பாதிப்பு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் இந்தியா

Spread the love

கொரோனா பாதிப்பால் சீனாவில் இருந்து வெளியேறும் 1,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியா கவர்ந்திழுக்கிறது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியான மாற்றங்களும் நிகழ்கின்றன. டிரம்பின் நடவடிக்கை, உலகளாவிய வர்த்தக உறவுகளை மோசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களும் அரசாங்கங்களும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சீனாவின் பொருளாதார வளங்களை பிரித்து கொள்ள முயல்கின்றன.

ஜப்பான் தனது அண்டை நாடுகளிலிருந்து தொழிற்சாலைகளை மாற்றுவதற்கு 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் சீன சப்ளையர்களை நம்புவதை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, முதலீட்டை அதிகரித்து வருகிறார். இது கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த எட்டு வாரங்கள் நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உயர்த்த உதவும். மேலும் உற்பத்தித் துறையில் 25 சதவீதம் ஆக உயர்த்துவதற்கான இலக்கை அடைய அவருக்கு உதவும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது இன்னும் அதிகம் உள்ளது.

மருத்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அபோட் ஆய்வகங்கள் உள்ளிட்ட அமெரிக்க வணிகங்களை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் இந்திய அரசாங்கம் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அணுகியது, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக இந்திய அதிகாரிகள் அரறிவித்தனர்.

கலந்துரையாடலின் போது 550 க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் சப்ளையர்கள், உணவு பதப்படுத்தும் பிரிவுகள், ஜவுளி, தோல் மற்றும் கார் பகுதி தயாரிப்பாளர்களுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவின் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி எழுதும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் பால் ஸ்டானிலாண்ட் கூறும் போது

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியா ஒரு இடத்தைப் பெற முயற்சிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, ஆனால் இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் தீவிர முதலீடுகள் தேவைப்படும்.தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற இடங்களிலிருந்து இந்தியா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

ஒட்டுமொத்த செலவுகள் சீனாவை விட அதிகமாக இருந்தாலும் கூட, அமெரிக்கா அல்லது ஜப்பானுக்கு திரும்பிச் சென்றதை விட, நிலம் மற்றும் மலிவில் திறமையான உழைப்பைப் பெறுவதில் இந்தியா மிகவும் சிக்கனமானது என்று அதிகாரிகள் நிறுவனங்களுக்குத் எடுத்து கூறி உள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் குறித்த குறிப்பிட்ட கோரிக்கைகளை இந்தியா பரிசீலிக்கும் என்ற உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கியுள்ளனர், இது நிறுவனங்களுக்கு பெரும் தடுமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது உண்மை. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான வரியை ஒத்திவைக்க மின் வணிகம் நிறுவனங்களின் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page