சவுதி அரேபியாவிலிருந்து பெருமளவு ஆயுதங்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு

Spread the love

சவுதி அரேபியாவிலிருந்து பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்

1990ம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் படைகள் சவுதியில் இருந்து வருகின்றன. அந்நாட்டின் விமான நிலையத்தை தங்கள் போர் விமான ஓடுதளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு சவுதியின் ஆராம்கோ எண்ணெய் வயல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது பலத்தை அங்கு பெருக்கி வந்தது.

மேலும் ஈரானை மிரட்டவும் குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்போது வளைகுடா பகுதியில் அமெரிக்கப்படைகள் இருப்பது தங்களுக்கு பலனளிக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுவதால் அப்பகுதியில் பெருமளவு ஆயுதங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page