புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

Spread the love

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

*ரூ. 12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

*நகர்புறத்தில் வீடில்லாத ஏழைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு மார்ச் 28 முதல் இலவச உணவு வழங்கப்படுகிறது.
*ஏற்கனவே 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

*புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் கிராமங்களிலேயே வேலை வாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை
*வெளிமாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களுக்கும் அரசின் நல திட்டங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை
* அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் உறுதி செய்யப்படும்.
* தொழிலாளர்களின் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதிய கிடைப்பது உறுதி செய்யப்படும்.

*தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 2.33 கோடி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
*ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page