துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு

Spread the love

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு

அங்காரா:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள 10 நாடுகளின் பட்டியலில் துருக்கியும் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 1,635 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4007 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page