தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

Spread the love

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதே இடத்தில் நிலை கொண்டிருக்கிறது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், நாளை மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும்.

இது வரும் 17ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து 18ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகரக் கூடும். இதன் காரணமாக 18 மற்றும் 19 தேதிகளில் சூறாவளி காற்று ஆனது மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page