தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 6 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 384 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆகும்.
இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. இதில், விமான நிலைய தனிமைப்படுத்தல், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் அடங்கும்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவியவர்களில் 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரி விவரம்:-
அரியலூர் – 34
செங்கல்பட்டு – 389
சென்னை – 5,017
கடலூர் – 164
தர்மபுரி – 4
திண்டுக்கல் – 25
கள்ளக்குறிச்சி – 64
காஞ்சிபுரம் – 81
கன்னியாகுமரி – 20
கரூர் – 11
கிருஷ்ணகிரி – 18
மதுரை – 56
நாகை – 4
நீலகிரி – 3
பெரம்பலூர் – 109
புதுக்கோட்டை – 5
ராமநாதபுரம் – 9
ராணிப்பேட்டை – 39
சிவகங்கை – 10
தென்காசி – 26
தஞ்சாவூர் – 18
தேனி – 35
திருவள்ளூர் – 348
திருவண்ணாமலை – 133
திருவாரூர் – 3
தூத்துக்குடி – 28
திருநெல்வேலி – 116
திருச்சி – 10
வேலூர் – 12
விழுப்புரம் – 153
விருதுநகர் – 13
விமானநிலைய தனிமைப்படுத்தல் – 13
மொத்தம் – 6,970