ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறப்பு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Spread the love

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலத்தை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்தது.

பின்னர், தென்மேற்கு பருவ மழை துவங்கி அணை நிரம்பிய பிறகே, மேட்டூரில் நீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பிறகு, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page