சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று

Spread the love

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் 24 மணி நேரத்துக்குள் புதிதாக 23 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 6 பேருக்கு மட்டுமே அறிகுறியுடன் நோய் தாக்கம் இருப்பதாகவும், மற்ற 17 பேருக்கு அறிகுறியின்றி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய் அறிகுறியுடன் பாதிப்புக்கு உள்ளான 6 பேரின் ஒருவர் கொரோனா வைரஸ் தோன்றிய ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page