ஒரு நாளுக்கு, சென்னை வர 25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு

Spread the love

ஒரு நாளுக்கு, சென்னை வர 25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 25 மட்டுமே என்று கட்டுப்படுத்தப்படுகிறது. கோவை, திருச்சி, மதுரைக்கு விமானங்களை இயக்கலாம். அதிக தொற்று நிகழ்வை முன்னிட்டு குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களை அனுமதிப்பதில் மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது.

தமிழகத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையில் எந்த நிபந்தனைகளும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page