இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.
டோக்கியோ
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது.
முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகமூடிகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்” என்று சங்கம் தனது இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.குழந்தைகளிடையே மிகக் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் இருந்தன என்றும், பெரும்பாலான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜப்பான் குழந்தை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளிகளிலோ அல்லது பகல்நேர பராமரிப்பு வசதிகளிலோ கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.