வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமால் உலக நாடுகள் திக்குமுக்காடி கொண்டிருக்கும் நிலையில் அடுத்தப் பிரச்சினையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னார் ஐநா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளி படை நகர்வு குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.