மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

Spread the love

மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சென்னை,

எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் விலை குறைந்த நிலையில், தற்போது தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம் தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. தற்போது இன்று (ஜூன் 1ம் தேதி) அறிவிக்கப்பட்ட தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மே மாதத்தில் ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக குறைந்துள்ளது.

இந்த விலை ஏற்றம் மானிய விலை எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தாக்கம் ஏற்படுத்தாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 761 ரூபாய் 50 காசுகளாக இருந்த சிலிண்டர் விலை மே மாதம் 569 ரூபாய் 50 காசுகளாக குறைந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page