கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க, ஜி20 நாடுகள் உறுதியளித்துள்ளன.

மாஸ்கோ,
ஜி20 நாடுகள் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை ஜி20 நாடுகள் மற்றும் அதன் சிறப்பு அழைப்பாளர் நாடுகள் ஒருங்கிணைத்து வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு 21 பில்லியன் டாலர் (ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி) ஒதுக்க உறுதி பூண்டுள்ளோம். இந்த நிதி, கொரோனா பரிசோதனை, தடுப்பூசி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.