ஆசிய நோபல் பரிசு என அழைக்கப்படுகிற ரமோன் மக்சேசே விருது, இந்த ஆண்டு ரத்து

Spread the love

கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாங்காக்,

விமான விபத்தில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற 6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரமோன் மக்சேசே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது.

ஆனால் 2009-ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்படுகிறது.

1958-ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிற இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.

இந்த விருதை இந்தியாவில் இருந்து வினோபாபாவே, அன்னை தெரசா, ஜெயபிரகாஷ் நாராயண், சத்யஜித்ரே, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவிசங்கர், டாக்டர் வி. சாந்தா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.

இது வரை 330 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் ரமோன் மக்சேசே விருது யாருக்கும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த விருது வழங்காமல் விடுபடுவது இது மூன்றாவது முறை ஆகும்.

1970-ம் ஆண்டு நிதி நெருக்கடியின் காரணமாகவும், 1990-ம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம் காரணமாகவும் இந்த விருது ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page