கொரோனா பாதிப்பு: நோய் தோன்றிய உகான் நகரை முந்தியது மும்பை

Spread the love

கொரோனா பாதிப்பில் நோய் தோன்றிய சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது.

மும்பை

கொரோனா வைரஸ் முதல் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் உகான் நகரில்அந்நோயால் 50 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவின் ஹாட் ஸ்பாட் எனப்படும் மும்பையில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 760 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியம அரசு புள்ளி விபரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது தேசிய அளவில் பதிவான தொற்றில் கால் பகுதியாகும். 42,638 பேர் ஏற்கனவே மிகவும் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனாவை உலகிற்கு தந்த சீனாவில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் பாதிப்பு தற்போது 2 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அதிக பாதிப்பு நிறைந்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page