58 நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி திரட்டியது ரிலையன்ஸ் கடனில்லா நிறுவனம் ஆகிறது

Spread the love

58 நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி திரட்டியதன் மூலம் கடனில்லா நிறுவனமாக ரிலையன்ஸ் ஆகியுள்ளது.

மும்பை,

ஜியோவில் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ .11,693.95 கோடியும், உரிமை வெளியீட்டில் இருந்து ரூ.53,124.20 கோடியும் மூலம் 58 நாட்களில் ரூ.168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் குழுமம். பெட்ரோசில்லறை ஜே.வி.யில் பிபிக்கு பங்கு விற்பனையுடன், மொத்த நிதி திரட்டல் 1.75 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:

எங்களது சில டிஜிட்டல் யூனிட் ஜியோ பிளாட்பார்ம்களில், உலகின் சில முதன்மையான நிதி முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ள பதிவு முதலீடுகள் மற்றும் ஒரு மெகா பங்கு விற்பனை ஆகியவை இணைந்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளது.

2021 மார்ச் 31ந் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்.

இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page