உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்த சீனா- செயற்கைகோள் படங்கள்

Spread the love

இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் 16 சீன கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

புதுடெல்லி:

கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் படைகள் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை ஊடுருவியுள்ளன, இது ஒரு படையெடுப்பு ஆகும். சீனா 1960 தனக்கு சொந்தமென் உரிமைகோரி வரும் பகுதியின் எல்லை கோட்டுக்கு முன் உள்ளது.

என்.டி.டி.வி வெளியிட்டு உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் ஜூன் 25 நிலவரப்படி, இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீனாவின் 16 கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

செயற்கைக்கோள் படங்கள் ஒரு தெளிவான ஊடுருவலை காட்டுகிறது . கூகிள் எர்த் ப்ரோவில் உள்ள அளவீட்டு கருவி, அதன் சொந்த உரிமைகோரல் கோட்டிற்கு வடக்கே கல்வான் ஆற்றங்கரையில் 423 மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page