சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

சாத்தான்குளம் வழக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீர்த்துப்போக செய்யப்படும் என பரவலாக பேசப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதால் கொலை வழக்கு பதிவு, கைது என நீண்டிருக்கிறது.
இந்த வழக்கில் நீதித்துறை நடுவரிடம் துனிச்சலுடன் சாட்சியளித்த தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கச் செய்தது, ரேவதியுடன் போனில் பேசி அவருக்கு தைரியம் ஊட்டியது இந்த வழக்கில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணமான அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கமான சுழற்சி முறை நடவடிக்கையின் அடிப்படையில் நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.