தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 60,592 பேர் மீண்டுள்ளனர் புதிதாக 4,280 பேருக்கு தொற்று; 65 பேர் பலி

Spread the love

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 60,592 பேர் மீண்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 60,592 பேர் மீண்டுள்ளனர். நேற்று புதிதாக 4,280 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 ஆயிரத்து 214 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 47 பேரும், தனியார் மருத்துவமனையில் 18 பேர் என மொத்தம் 65 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையில் 39 பேரும், மதுரையில் 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், காஞ்சீபுரத்தில் 4 பேரும், திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருவள்ளூரில் தலா இருவரும், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நெல்லை, ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் அடங்குவர்.

தமிழகத்தில் 35 ஆயிரத்து 426 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகளில், 4,280 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 90 பேரும் அடங்குவர்.

தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 65 ஆயிரத்து 604 ஆண்களும், 41 ஆயிரத்து 375 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 22 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 277 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 ஆயிரத்து 877 முதியவர்களும் இடம் பெற்று உள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட 224 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 514 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்படி சென்னையில் 1,842 பேரும், மதுரையில் 352 பேரும், திருவள்ளூரில் 251 பேரும், செங்கல்பட்டில் 215 பேரும், திருவண்ணாமலையில் 173 பேரும், ராமநாதபுரத்தில் 149 பேரும், காஞ்சீபுரத்தில் 134 பேரும், ராணிப்பேட்டையில் 104 பேரும், விருதுநகரில் 100 பேரும், வேலூரில் 85 பேரும், திருச்சியில் 83 பேரும், சேலத்தில் 70 பேரும், கடலூரில் 75 பேரும், கன்னியாகுமரியில் 69 பேரும், கோவையில் 67 பேரும், தூத்துக்குடியில் 64 பேரும், நெல்லையில் 61 பேரும், விழுப்புரத்தில் 57 பேரும், தேனியில் 54 பேரும், சிவகங்கை, திருப்பத்தூரில் 48 பேரும், புதுக்கோட்டையில் 42 பேரும், திண்டுக்கலில் 22 பேரும், கள்ளக்குறிச்சியில் 21 பேரும், தென்காசியில் 17 பேரும், ஈரோட்டில் 16 பேரும், திருவாரூரில் 11 பேரும், நாகப்பட்டினம், தர்மபுரியில் தலா 6 பேரும், பெரம்பலூர், நீலகிரியில் தலா 5 பேரும், கிருஷ்ணகிரி, நாமக்கலில் தலா 4 பேரும், அரியலூர், கரூர், தஞ்சாவூரில் தலா 3 பேரும், திருப்பூரில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page