பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

Spread the love

பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை வருமான வரித்துறை நீட்டி உள்ளது.

புதுடெல்லி,

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த மாதம் 30-ந்தேதி வரை வருமான வரித்துறை காலக்கெடு அளித்து இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கி உள்ளன. இதை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை அடுத்த ஆண்டு (2021) மார்ச் 31-ந்தேதி வரை வருமான வரித்துறை நீட்டி உள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை தனது டுவிட்டர் தளத்தில், ‘நாம் இருக்கும் இந்த நேரத்தை புரிந்து கொண்டு, பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உள்ளோம். அதன்படி பான்கார்டு-ஆதார் இணைப்பை 2021 மார்ச் 31-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். இந்த காலக்கெடு நீட்டிப்பு உங்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page