ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

Spread the love

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில் 13,48,31,798 மறு பயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளது.

இந்த முகக்கவசங்களை காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் முகக்கவசங்கள் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் தயாராக உள்ளன.

இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page