மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில், நாட்டை பாதுகாப்பதில் சிஆர்பிஎஃப் முன்னணியில் நிற்பதாகவும் இந்தப் படையின் துணிச்சலும், திறன் வல்லமையும் அனைவராலும் பாராட்டப்படுவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளர். வரும் ஆண்டுகளில் சிஆர்பிஎஃப் படை மேலும் சிறந்த சாதனைகளைப் படைக்கட்டும்” என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.