டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 88% ஆக உள்ளது; அரவிந்த் கெஜ்ரிவால்

Spread the love

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளது என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கணிசமாக கட்டுப்படுத்திய டெல்லியின் மாதிரி திட்டம் நம் நாட்டிலும் உலகளவிலும் விவாதிக்கப்படுகிறது. டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 88 ஆக உள்ளது. தற்போது 9 சதவீதத்தினர் மட்டுமே கொரோனா தொற்றுடன் உள்ளனர். 2-3 சதவிதம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் நேற்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் கிட்டதட்ட 100 பேர் ஒருநாளில் உயிரிழந்தனர். முன்பு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 100- பேரில் 35 பேருக்கு தொற்று இருந்தது. தற்போது 5 பேர் என்ற அளவுக்கு தொற்று உள்ளது. இது சாதகமான விகிதம் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து தவறாமல் கடைபிடிக்க வேண்டும். டெல்லியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page