சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் -சீனா எச்சரிக்கை

Spread the love

சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி:

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15 ந்தேதி நடந்த இந்தியா- சீனா வீர்ர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லபட்டனர். இதை இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகள் சீனாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

இதை தொடர்ந்து சீனாவுடனான பொருளாதாரத்தை துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று சீனா வியாழக்கிழமை எச்சரித்து உள்ளது.

இது குறித்து சீன தூதர் தூதர் சன் வீடோங் தனது டுவிட்டரில்

சீனாவுடனான பொருளாதாரத்தை துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் இந்தியாவுக்கு இது ஒரு மூலோபாய அச்சுறுத்தல் அல்ல என்றும், “ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் வாழ முடியாது என்ற பொதுவான கட்டமைப்பு மாறாமல் உள்ளது” என்றும் கூறினார்.

நமது பொருளாதாரங்கள் மிகவும் பூர்த்திசெய்யப்பட்டவை, பின்னிப்பிணைந்தவை மற்றும் ஒன்றோடொன்று சார்ந்தவை என கூறி உள்ளார்.

கலவான் இந்தியாவின் எல்லைக்குள் சீன துருப்புக்கள் ஊடுருவியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அனால் எல்லைக்கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சீனா கூறுகிறது.

இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி படைகள் பின்வாங்குவது இன்னும் நிறைவடையவில்லை என்றும், மற்றொரு சுற்று தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என்றும் இந்தியவெளியுறவு அமைச்சகம் ஒரு ஆன்லைன் மாநாட்டில் தெரிவித்துள்ளது.

“சீனப் எங்களுடன் முழுமையான படைகளை திரும்ப பெறுவது மற்றும் எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கு நேர்மையாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று இந்திய செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page