216-வது நினைவு நாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை,
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அன்னாரது நினைவுதினம் ஆடி 18-ம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது.