அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு

Spread the love

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார்.

மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12½ கோடி முக கவசங்களை அனுப்பி வைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நிபுணர் குழுக்களையும் அனுப்பி வைக்க தயார் எனவும் அவர் கூறி உள்ளார்.

பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக திறப்பதற்காக இந்த நடவடிக்கையை தான் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page