கடந்த ஆண்டில் பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் 308 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன

Spread the love

பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன என ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.


வாஷிங்டன்

சமூக வலைதளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு தங்கள் ஆய்வுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன, இது கொரோனா நெருக்கடியின் போது உயர்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைதளத்தில் பரவும் தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களால் தடுப்பூசி போட தயாராக இருக்கும் மக்கள் தங்கள் முடிவை மாற்ற வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை, கொரோனா தொடர்பான 9.8 கோடி தவறான தகவல்களுக்கு எச்சரிக்கை முத்திரையை பயன்படுத்தி உள்ளோம். மேலும் உடனடி தீங்கு விளைவிக்கும் 70 லட்சம் தவறான தகவல்களை அகற்றினோம் என அவாஸ் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் வகையில் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உதவி செய்துள்ளோம், கொரோனா பற்றிய இணைப்பை யாராவது பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும்போது, அவர்களை நம்பகமான சுகாதாரத் தகவலுடன் இணைக்க வழிவகை செய்துள்ளோம் என ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page